Showing posts with label நண்பன். Show all posts
Showing posts with label நண்பன். Show all posts

Thursday, July 7, 2011

பூச்சாண்டியின் காஞ்சோண்டி களம்

                 


                  மீண்டும் நீண்ட நாட்களின் பின் வலைப்பூவிற்குள் வந்தேன், காரணம் நானாக எழுத இல்லை. எனது நண்பனின் வேண்டுகோளுக்கிணங்க. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட போட்டி காரணமாக தானும் வலைப்பூவில் இணைய போவதாக கூறிவிட்டான். அப்பொழுதே கூறினேன் போட்டி போடுவது என்றால் ஒவ்வொரு நாளும் பதிவிடுபவோரடு போட்டி போடு என்று. பாசக்காரன் இல்லை என்னோடுதான் போட்டி போடுவேன் என்கிறான். இந்த கொடுமைய வேற எங்க போய் நான் சொல்வது.

                   அதில ஒரு உதவி வேற கேக்கிறான், தான் வலைப்பதிவு தொடங்குறது சம்மந்தமா ஒரு பதிவு போடட்டாம். என்ன கொடுமை சார் இது. 

                   சரி, இப்ப நான் தலைப்புக்கு வாறன். அவரோட தொடங்க போற வலைப்பதிவின் தலைப்பு தான் காஞ்சோண்டி களம் அவரின்ட பெயர் கவிஞர் பூச்சாண்டியாம்.   வாசிக்கும்போது கடிக்காமல் இருந்தால் சரி. ஒவ்வொரு நாளும் கவிதை சொல்லி சொல்லி கடிக்கிறான். இனி வலைப்பூக்கள் இருக்கிறவையும் கடி வாங்க போகினம். 

என்னதான் இருந்தாலும் ஒரு நண்பானாக வரவேற்கின்றேன்.... 

தொடங்கிய பின்னர் இணைப்பு சுட்டி தருகின்றேன்....

நண்பேண்டாடாடாடாடா...................


ஒரு  சின்ன மாற்றம்....  சிங்கம் தனது வலைப்பூவினுடைய தலைப்பையும் தனது பெயரையும் மாற்றம் செய்து விட்டது.  



இப்போது வலைப்பூவின்னுடைய பெயர் பூச்சாண்டி யாம்.
தனது  சொந்த பெயருடனே ஆரம்பித்துள்ளார்.  

வலைபூவினுடைய முகவரி ::: http://kanchodi.blogspot.com/

உயிர் மேலஆசை இருந்தால் தயவுசெய்து மேலுள்ள சுட்டியை சொடுக்கவேண்டாம்......