Monday, July 18, 2011

பாட்டி சுட்ட வடையும் நுண்ணரசியலும்.......





மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்றது...... எல்லோருடனும் பகிரலாம் என்று எண்னினேன்...

ஆயா  சுட்ட வடை


கவிப் பேரரசு வைரமுத்து பாணியில்...


ஒரு ஊரில்...

புழுதி படிந்த ஒரு கிராமத்தில்...
 ஒரு ஆயா வடை சுட்டு விற்றுவந்துகிட்டிருந்தாங்க...

ஒரு யெளவனக் கிழவி  வடை சுட்டு விற்று வந்தாள். காசு பெற்று வந்தாள்....

அந்த  வடையை  எப்படியாவது திருடிவிட வேண்டும் என ஒரு காக்கா வந்து
உக்காந்திருச்சாம்.

அந்த கந்தக வடையை கவர்ந்து செல்ல அங்கே வந்தது ஒர் கார்மேக காகம்...

ஆயா அது தெரியாமல் வடை சுட்டு போட்டுகிட்டே இருந்திச்சாம்..

பாட்டிக்கு மட்டும் அந்த கார்மேக காகத்தின் கள்ள எண்ணம் தெரிந்திருந்தால்
அவளது கல்லரை பூக்கள் கூட அவளுக்காக கண்ணீர் சிந்தியிருக்காது...

ஆயா அசந்த நேரம் பார்த்து காக்கா வடையை தூக்கிக் கொண்டு போய்ட்டுதாம்...

பாட்டி பாராத சமயம்... பாட்டி பாராத சமயம்...  அந்த கார்மேக காகம் சந்தன
மின்னல் போல் பாய்ந்து அந்த கந்தக வடையை கவர்ந்து சென்றது...

 மரத்தின் மேல் போய் உக்கார்ந்திச்சாம்...

விதைக்குள் இருந்து வந்த விருட்சம் அங்கே வளர்ந்து நின்றது பல வருக்ஷம்..
அதன் சுந்தரக் கிளையினில் சென்று அமர்ந்தது அந்த சொர்ப்பனக் காகம்...

அப்போ திடீரென அங்கு ஒரு நரி வந்தது...

பூவுக்குள் பூகம்பம் போல் புறப்பட்டு வந்தது அந்த நரி... அந்த நரி
நர்த்தக நரி... நாளடியார் நரி... நீதியறிந்து போதி சொல்லும் போதி மரத்து
சாதி...(அப்பா நரிக்கு எவ்வளோ introduction)

காக்கா வைச்சிருந்த வடையை பார்த்துச்சாம்...

கார்மேக காகம் வைய்த்திருந்த வடையை அந்த நரி பார்த்தது... உடல் வியர்த்தது...

அந்த வடையை எப்படியாவது தான் தின்ன வேனும் என்று அந்த நரி திட்டம் போட்டுச்சாம்...

அந்த ராஜ வடையை அபகரிக்க அதன் நந்தவனத்து மூளை நாச வேலை ஒன்று செய்தது...

நரி அந்த மரத்தடிக்கு  சென்றது...

நரி அதுவாக சென்றது.காகம் இருந்த மரத்தடிக்கு மெதுவாக சென்றது...
காக்கா இதை கவனிக்கவில்லை...

ஆனால் அந்த கார்மேக காகமோ இச்சக அழகியாக எச்சம் கூட போட மறந்து அந்த
வீரிய வடையை தனது நேரிய விரல்களுக்கிடையே வைத்து அதன் கூர்மையை
சோதித்துக்கொண்டிருந்தது...

நரி சொல்லிச்சாம் காக்கா காக்கா நீ ரொம்ப அழகாயிருக்கிராய் ஒரு பாட்டு
பாடு என்டு...

நரி பகர்ந்தது ஓ உலக அழகியே...உள்ளூர் மொனலிசாவே...நகராட்சிப்
பூங்காவிற்குள் நுழைந்த நமீதாவே... அந்தபுறத்துக்குள் அத்துமீறி நுழைந்த
அக்ஷினே... தீவுத்திடளுக்குள் திடூம் என நுழைந்த திரீசாவே... நீ
பார்க்கவே எவ்வளவு அழகு... நீ மட்டும் உன் கந்தர்வக் குரலில் ஒரு கானம்
இசைத்தால்... ஒரு கானம் இசைத்தால் எருதுக்கும் விருது கிடைக்கும்...
சர்ப்பம் கூட கர்ப்பம் தரிக்கும்... ஏன் நீருக்கும் வியர்க்கும்
என்றது...

அதுக்கப்புறம் என்ன ஆச்சு என்கிறது தான் நமக்கு தெரியுமே...காக்கா பாட்டு
பாடிச்சுது... நரி வடையை எடுத்துக்கிட்டுது...

இல்லை... இந்த இடத்தில் தான் சரித்திரம் சரிகிறது... பூகோளம்
புறள்கிறது...தமிழ் தடுமாறுகிறது... நரியின் தேவ எண்ணத்திலே ஈட்டி
பாய்ந்தது... ஏனென்றால் காகம் என்ன பதில் எடுத்தது தெரியுமா?...

ஏய் நர்த்தக நரியே நான் பாட மாட்டேன்... ஏனென்றால்... நான் வைரமுத்துவின்
வாசலில் வளர்ந்த காகம்... நான் வைரமுத்துவின் வாசலில் வளர்ந்த காகம் ஆகவே
மெட்டு இல்லாமல் பாடமாடேன் என சொல்லி வடையுடன் பறந்து சென்றது...


குழும நண்பர்களே... பாசமுள்ள குழும நண்பர்களே

காகத்தின் உயிரில் வசந்தம் இனித்தது... மனதுக்குள் மழை
பொழிந்த்தது...அங்கே ஆனந்தங்கள் பரவசம்... அனுமதி இலவசம்...

கார்மேக காகத்தின் கதை என்னைப் பொறுத்தவரையில் ஒரு கருவாச்சி காவியம்...
கள்ளிக்காட்டு இதிகாசம்...

பாசமுள்ள குழும நண்பர்களே... உங்கள் பள்ளிகளிலோ... அல்லது
பல்கலைக்கழகங்களிலோ... இந்த கதையை பாடத்திட்டமாக்குவதற்கு பரிந்துரை
செய்யுங்கள்...



X-RAY REPORT
ஆயா  சுட்ட வடை

நடந்தது என்ன??????

ஆராய்கிறார் ஸ்ரீ-லங்காவின் பிரபல இராணுவ  செய்தி ஆய்வாளர்

பாட்டி வடை சுட்ட கதையின் நுண்ணரசியல்



இந்த கதையை மேலோட்டமாக படிக்காமல் உற்று கவனித்தால் இதில்
ஒளிந்திருக்கும் நுண்ணரசியல் புலப்படும். இந்த கதையில் வரும் காக்கா
தலையை பக்கவாட்டில் ஆட்டி வடையை சாப்பிடுவது இது ஒரு சைவ காக்கா என்று
புரிகிறது. தலையை மேலும் கீழும் ஆட்டிய நரி வைணவ சமயத்தை சேர்ந்தது.
அப்பாவி சைவ காக்கையை தந்திர வைணவ நரி ஏமாற்றியது சைவர்களை அப்பாவிகளாக
சித்தரிக்க உதவுகிறது. இதன் மூலம் கதை ஆசிரியர் வைணவத்துக்கு எதிராக
சைவத்தை தூக்கி பிடிக்கிறார் என்று தெரிகிறது. புரிகிறதா தோழ்ர்களே ?


மேலும் இந்த கதையில் கதை முழுவதும் மைய பாத்திரமாக வடை வருகிறது.
முன்பெல்லாம் கதைகளில் வைணவம் அதிகமாக வரும். இந்த கதையில் வரும் வடை சைவ
வடை. குறைந்தபட்சம் இடைவேளைக்கு பின் வடையை வைணவ போண்டா வாக மாற்றி
இருந்தால் கொஞ்சம் நடுநிலை இருந்திருக்கும். மணிரத்னம் கதைகளில் வடை ,
போண்டா இரண்டுமே சமமாக வரும்.


அத்துடன் இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்மிடையே ஊறிப்போன நிலபிரபுத்துவ
கூறுகளை உள்ளடக்கிய பொதுபுத்தி சிந்தனையின் குறியீடு இந்த வடை. வடை
என்பது எல்லாருக்கும் கிடைக்கும் பொருளும் இல்லை. மேல்தட்டு மற்றும்
நடுத்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே வடை சாப்பிட சாத்தியப்படும். கதை
ஆசிரியர் தன் வர்க்க நலனை பாதுகாப்பதற்காக இங்கு வடையை உயர்த்தி
பிடிக்கிறார். இது புரியாமல் இந்த கதையை எல்லா வர்க்கத்தினரும்
முட்டாள்தனமாக தங்கள் பேரன் பேத்திக்கு சொல்லி வருகிறார்கள். இந்த
கதையில் பாட்டி என கஞ்சி காய்ச்சி இருக்கக்கூடாதுகஞ்சி குடித்தால்
நரியின் மூக்கு வெந்து விடுமாஇந்த வடை அரசியல் பற்றி 1852 இலேயே
எங்கெல்ஸ் எழுதியிருக்கிறார். புரட்சி வெடித்து தொழிலாள வர்க்கம் ஆட்சியை
கைப்பற்றும்போது கஞ்சி வடையாக மாறும். வடை கஞ்சியாக மாறும். சோவியத்
ரஷ்யாவில் வடை தடை செய்யப்பட்டதை இங்கு நினைவு கூறுங்கள்.






யப்பா வடைக்குள் எவ்வளவு அரசியல்......






Friday, July 8, 2011

புக்கிட் திங்கி (Bukit Tingi)

                       

                       சென்ற வருடம் மலேசியா சென்றவுடனே இரண்டாம் வருடம் தொடங்கும் முன்னர் சென்ற ஒரு நாள் வெளியிட பயணம். எனது நண்பனுக்கு அன்று பிறந்த தினம். முதல் நாளே புக்கிட் திங்கி போவதாக முடிவாகிவிட்டது. எனது நண்பனிடம் ஒரு கார் இருந்தமையால் அதிகாலை எழுந்து பிரயாண ஏற்பாடுகளை கவனிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. ஆனாலும் கொஞ்சம் காலைப்பொழுதே எழுந்து விடுவது தான் முடிவு. எங்களுடன் படிக்கும் வேறு சில நண்பர்களும் எங்களுடன் வருவதாக இருந்தது. காலை 8 மணிக்கு (அது வழமைக்கு மாறு தான், வழக்கமாக பகல் ஒரு மணிக்கு தான் எங்களுக்கு காலை விடியும்), எழுந்து கைபேசியை பார்த்தால் எங்களுடன் வருவதாக இருந்த மற்ற நண்பர்கள் தங்களால் வரமுடியாது என்று குறுங்செய்தி போட்டு இருந்தனர். பார்த்த உடனே எனது நண்பனின் அறைக்கதவை தட்டினேன். விசயத்தை சொன்னேன் எங்களுடன் வருவதுக்கு வேறு யாரவது அந்த நேரம் எழுந்துவிட்டார்களா என்று பார்த்தோம் ஒருவனை தவிர அனைவரும் தூக்கத்தில் இருந்தனர். சரி என்று அந்த நண்பனை ஒரு மணி நேரத்தில் வெளிக்கிட சொல்லி நாங்களும் வெளிக்கிட்டம்.

                        9 மணி போல பிரயாணம் ஆரம்பித்தது. மலேசியாவில் சாலை வசதிகள் மிகவும் நல்ல முறையில் இருப்பது எங்கள் பயணத்தை இலகுவாக்கியது. புக்கிட் திங்கி பெரும்பாலும் அனைவரும் அறிந்த கமரூன் ஹைலண்ட்ஸ் செல்லும் சாலையில் அதையும் தாண்டி செல்ல வேண்டும். எனது நண்பன் தனது சீன நண்பன் ஒருவன் மூலம் அந்த இடத்தைப்பற்றி அறிந்திருந்தான். அங்கு போகும் முதன் அங்கு இருக்கும் கட்டிடங்கள் ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்டு இருக்கும் என்று மட்டும் கேள்விபட்டது மட்டும்தான்.



                       புக்கிட் திங்கியை அடைந்ததும் அங்கு ஒரு வரவேற்ப்பு பலகை அங்கு உள்ள இடங்களை காண்பித்தது.


                        அங்கு முயல் பண்ணை, கோல்ப் விளையாடுத்திடல், குதிரை லாயம், பிரெஞ்சு கட்டிட கலையில் அமைந்த கட்டிடங்கள், ஜப்பானிய கட்டிட கலையில் அமைந்த கட்டிடங்கள் மற்றும் தாவரவியல் பூங்கா என்று பல இருந்தன. நாங்கள் எல்லாவற்றையும் பார்க்க நேரம் கிடைக்குமோ என்று எண்ணினோம். எனவே பார்ப்பதற்கு எல்லோருக்கும் பிடித்த இடங்களை தெரிவு செய்தோம்.

                         முதலில் முயல் பண்ணை நோக்கி எமது பயணம் அமைந்தது. பார்க்கும் போது மனதுக்கு இரம்மியமாய் இருந்தது. மென்மையான பிராணிகள் குளிர்மையான காலநிலை உங்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே அழைத்துச்செல்லும்.





                         மேலும் பிரெஞ்சுக்கட்டிடக்கலையில் அமைந்த கோட்டைகள் கொத்தளங்கள் என சுற்றுல்லா பயணிகளை கவரும் இடங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 










                         மேலே உள்ள இடத்தை பார்த்த பிறகுதான் மஜ்னு படத்தில் நான் ஐரோப்பிய நாட்டில் எடுத்த என்று எண்ணிய "குல்முஹர் மலரே" பாடல் உண்மையில் இங்குதான் படமாக்கப்பட்டது என்று புரிந்தது. சந்தேகம் இருந்தால் கீழுள்ள வீடியோவை பாருங்கள்.




                          அதையும் தாண்டி போகும் போது ஜப்பானிய முறையில் இயங்கும் ஒரு சிறிய தேனீர்ச்சாலை உண்டு. ஆனால் அது ஒரு மலை சரிவில் இருக்கிறது. நடந்துதான் போக வேண்டும். அங்கு சென்றால் சிறிய ஜப்பானிய முறையில் மரத்தாலான வீடுகளை காணலாம். அருவியின் கரையில் அமைக்கப்பட்ட வீடுகள் மிகவும் குளிர்மையாக இருந்தன. அங்கேயே படுத்து சிறிது நேரம் தூங்கவும் செய்தோம். 




                         மேலும் போனால் அங்கு தாவரவியல் பூங்கா, ஹெல்த் கேர் ஸ்பா என்பன உண்டு. கையில் கேமரா இல்லை. கைபேசியில் சுட்ட படங்கள் தான் அவை. கைபேசியில் பட்டரி இல்லாமல் அணைந்துவிட்டது. எனவே மேற்பட்டஇடங்களின் படங்களை தர முடியவில்லை. காலை தொடங்கிய பயணம் மீண்டும் வீடு திரும்ப இரவு மணி 10 ஐ தாண்டி இருந்தது. 

                         கோலாலம்பூரிலிருந்து ஒரு நாளில் சென்று திரும்பக்கூடிய இடம். வேகமாக நகரும் வாழ்கையின் வேகைத்தை குறைக்க வேண்டும் என்றால் சென்று வரலாம். மலேசியா போகும் போது நேரம் கிடைத்தால் போய் பாருங்கள்.


Thursday, July 7, 2011

பயனுள்ள ரேடியோ App!

 

       
                     இப்போது அநேகமானோர் சாதாரண வகைத் கைபேசியை விடுத்தது Smart Phone என்று அழைக்கப்படும் பெரும்பாலும் சகல வேலைகளையும் செய்யகூடிய வகை கைபேசியை உபயோகின்றனர்.  அப்படி பட்ட கைபேசியை உபயோகிக்கும் போது, வானொலி நிகழ்சிகளை கேட்க ஒரு நல்ல செயலி இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா!



                     இணையத்தில் சகல வானொலி நிலையங்களையும் ஒரே இடத்தில் கேட்க அனைவருக்கும் தெரிந்த ஒரு தளம் தான் TuneIn .


                        இப்போது இந்த தளம் முன்னணி கைபேசி வகைகளுக்கு ஒரு செயலி அமைத்துள்ளது. எனக்கு தெரிந்த வரை IOS மற்றும் Android தளங்களில் இயங்கும் கைபேசிகளும் சாதனைகளும் இந்த செயலியை உபயோகிக்கலாம்.

IOS இயங்குதளங்களுக்கு - App Store



                       இந்த செயலி Apple App Store இல் கிடைக்கிறது. இரண்டு வகைகள் உண்டு. இலவசமானது மற்றையது 0.99 USD பெறுமதியானது. இலவசமானதில் வானொலி நிகழ்சிகளை ஒலிப்பதிவு செய்வது, தானாக இயங்க வைப்பது போன்ற வசதிகள் இல்லை. கட்டணம் செலுத்துவதில் மேற்கண்ட வசதிகள் உண்டு. 


Android இயங்குதளங்களுக்கு - Android Market

                         இந்த செயலியும் Android Market இல் கிடைக்கிறது. இங்கும் இலவசமானது மற்றும் கட்டணம் செலுத்துவது என்று இரண்டு வகை கிடைக்கிறது. நான் உபயோகித்து பார்காதபடியால் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. உபயோகித்தவர்கள் சொல்லவும்.



                       இந்த செயலியில் வானொலியை பல்வேறு பட்ட வகையில் வகைப்படுத்தி வைத்திருப்பது உபயோகிக்க இலகுவாக உள்ளது. GPS இற்கு இணைப்பு இருப்பதால் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலிகளை அந்த வகையில் வகைப்படுத்தும். மேலும் மொழி, நாடு மற்றும் இசை வகை என்றும் வானொலிகளை வகைப்படுத்தலாம். எனவே உபயோகிக்க இலகுவாக இருக்கும்.

         ஆனால் உபயோகிப்பதற்கு ஒரு இணைய இணைப்பு அவசியம்

கேட்ச் மீ இப் யூ கேன். (Catch Me If You Can - 2002).

                    


                           இது எனது முதலாவது திரைப்பட கண்ணோட்டம். விமர்சனம் என்று நான் சொல்லமாட்டேன். ஏனெனில் விமர்சிக்க எனக்கு அனுபவம் போதாது என்று தான் நான் நினைக்கிறேன். முதலிலே ஆங்கிலப்படதை பற்றி எழுதுகின்றேன், தமிழை விட்டுவிட்டு என்று நினைக்காதீர்கள். நான் தமிழை விடவில்லை. தமிழ்ப்படத்தை பற்றி எழுத நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள் அதுதான்.

                    கேட்ச் மீ இப் யூ கேன்... இது அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மைக் சம்பவத்தை தழுவி Steven Spielberg இனால் இயக்கப்பட்ட ஒரு ஹாலிவுட் திரைப்படம். நான்கே நான்கு வருடங்களில் ஒரு 19 வயது நிரம்பிய பையன் எப்படி பல மில்லியன் பெறுமதியான தானே தயாரித்த செல்லுபடியாகாத வங்கிக்காசோலைகளை பல வங்கிகளில் காசாக மாற்றுகின்றான். அந்த காசோலைகளை மாற்றுவது மட்டும் அல்லாமல் ஒரு விமான ஓட்டுனனர் , வைத்தியர் மற்றும் ஒரு சட்ட வல்லுநர்ஆக இருந்து எவ்வாறு பலரையும் ஏமாற்றுகின்றான் என்பதே படத்தின் கதை.



                           இந்த படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் இயல்பாய் உள்ளது இந்த படத்திற்கு வலிமை சேர்க்கிறது. அத்துடன் படத்தில் சீரியஸ்ஸானா காட்சிகளையும் நகைச்சுவை உணர்வை தூண்டகூடிய வகையில் படமாக்கி இருப்பது இயக்குனரின் திறமை.
                       
               இந்த படத்தில் Frank Abagnale Jr.   படத்தின் நாயகன்  ஆக Leonardo DiCaprio யும் அவனை துரத்தும் FBI அதிகாரியான Carl Hanratty ஆக Tom Hanks உம் நடித்து உள்ளனர்.

                             2003 ஆண்டுக்கான 2 ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டது.  மிகவும் சீரான வேகத்துடன் நகரும் திரைக்கதைக்காக இயக்குனரை மீண்டும் பாராட்டலாம்.

இந்த படத்தின் Trailer யும் இணைத்துள்ளேன்.


அத்துடன் இந்தப்படத்தை தரவிறக்கம் செய்ய Torrent சுட்டியும் இணைத்துள்ளேன்.  

தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
படத்தின் imdb சுட்டி இங்கே

இது எனது முதலாவது கண்ணோட்டம். எதாவது பிழைகள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும். என்னை திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.


                     

பூச்சாண்டியின் காஞ்சோண்டி களம்

                 


                  மீண்டும் நீண்ட நாட்களின் பின் வலைப்பூவிற்குள் வந்தேன், காரணம் நானாக எழுத இல்லை. எனது நண்பனின் வேண்டுகோளுக்கிணங்க. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட போட்டி காரணமாக தானும் வலைப்பூவில் இணைய போவதாக கூறிவிட்டான். அப்பொழுதே கூறினேன் போட்டி போடுவது என்றால் ஒவ்வொரு நாளும் பதிவிடுபவோரடு போட்டி போடு என்று. பாசக்காரன் இல்லை என்னோடுதான் போட்டி போடுவேன் என்கிறான். இந்த கொடுமைய வேற எங்க போய் நான் சொல்வது.

                   அதில ஒரு உதவி வேற கேக்கிறான், தான் வலைப்பதிவு தொடங்குறது சம்மந்தமா ஒரு பதிவு போடட்டாம். என்ன கொடுமை சார் இது. 

                   சரி, இப்ப நான் தலைப்புக்கு வாறன். அவரோட தொடங்க போற வலைப்பதிவின் தலைப்பு தான் காஞ்சோண்டி களம் அவரின்ட பெயர் கவிஞர் பூச்சாண்டியாம்.   வாசிக்கும்போது கடிக்காமல் இருந்தால் சரி. ஒவ்வொரு நாளும் கவிதை சொல்லி சொல்லி கடிக்கிறான். இனி வலைப்பூக்கள் இருக்கிறவையும் கடி வாங்க போகினம். 

என்னதான் இருந்தாலும் ஒரு நண்பானாக வரவேற்கின்றேன்.... 

தொடங்கிய பின்னர் இணைப்பு சுட்டி தருகின்றேன்....

நண்பேண்டாடாடாடாடா...................


ஒரு  சின்ன மாற்றம்....  சிங்கம் தனது வலைப்பூவினுடைய தலைப்பையும் தனது பெயரையும் மாற்றம் செய்து விட்டது.  



இப்போது வலைப்பூவின்னுடைய பெயர் பூச்சாண்டி யாம்.
தனது  சொந்த பெயருடனே ஆரம்பித்துள்ளார்.  

வலைபூவினுடைய முகவரி ::: http://kanchodi.blogspot.com/

உயிர் மேலஆசை இருந்தால் தயவுசெய்து மேலுள்ள சுட்டியை சொடுக்கவேண்டாம்......



Sunday, April 17, 2011

Excuse me Boss You got a text message


Got Via Google Buzzz!!!
Thought of sharing!!



Excuse me Boss. You got a text message
அதிர்ந்த மொபைலை எடுத்து பார்த்தான் மதன்.
“good night baby, Sweet dreams”

சங்கீதாவிடம் இருந்த வந்த மெசெஜை படித்தவன் அவளை அழைத்தான். ”சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்”. இவனுக்காக ஸ்பெஷலாக வைத்திருந்த ஹலோ ட்யூன் இரவு நேரத்தில் இனிமையாய் ஒலித்தது. பேச்சினூடே சிச்சுவேஷன் அப்படியே “சங்கீத ஸ்வரங்கள்” பாடலுக்கு ஏற்ப மாறியது. அவர்கள் பேசிவிட்டு வைத்தபோது மணி அதிகாலை 4.30 தாண்டியிருந்தது.
மதனும் சங்கீதாவும் 4 வருட காதலர்கள். எல்லோருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் இவர்களுக்கு மட்டும் 12 மணி நேரம்தான். மிச்ச நேரம் கிரகாம்பெல் கண்டுபிடிப்பின் நவீன வஸ்துவிலே சென்றுவிடும்.
Good morning ammu.
மதியம் 12.30க்கு குட் மர்னிங் சொல்லிக் கொள்ளும் இருவர் இவர்களாக மட்டுமே இருக்கக்கூடும். மீண்டும் சாணக்யா. மீண்டும் சங்கீத ஸ்வரங்கள். மீண்டும் குட் மார்னிங் . மீண்டும் குட் நைட் என நீண்டது அவர்கள் காதல்.
ஒருநாள் மழையிரவில் சற்றே மயக்க நிலையில் இருந்தான் மதன். வழக்கமாக மெசெஜ் வரும் நேரம் கடந்துவிட கண்ணயர்ந்தான். தூக்கம் எப்போது வந்தது என்றறியா வண்ணம் உறங்கியும் போனான். அதிகாலை 8 மணிக்கு.. அவனுக்கு அதிகாலைதானே?. அதிகாலை 8 மணிக்கு மதனின் அலைபேசி அலறியது. சங்கீதாவின் வீட்டில் இருந்து வந்தது அந்த அழைப்பு. மதனின் முகம் சங்கீதாவின் உள்ளங்கை கணக்காக சிவந்து போனது. கையில் கிடைத்தை சட்டை, பேண்ட்டை எடுத்தணிந்தவன் பல்சரை முறுக்கியதில் 6 வினாடிகளிலே 80ஐ கடந்தது.
மதன் அந்த மருத்துவமனையை அடைந்த போது எதிரே ஸ்ட்ரெச்சரில் ஒருவரை முழுவதும் போர்த்தியபடி எடுத்துச் சென்றார்கள். கலங்கிய கண்களுடன் சங்கீதாவின் அம்மாவை அழைக்க மொபைலை எடுத்தான். படிக்கப்படாமலே இருந்த ஒரு மெசெஜ் அவன் கண்களில் பட்டது. திறந்தான்.
”Darling. I am just outside ur home. Met with an aacident. Want to see u once. I am dying. Plz come fast”
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
மதன் கத்திய சத்தத்தில் மருத்துவமனையே ஒரு நொடி ஸ்தம்பித்து போனது. சங்கீதாவின் அம்மா மதனைத் தாண்டி சென்ற ஸ்ட்ரெச்சரை நோக்கி ஓடினார். புரிந்துக் கொண்ட மதன் சத்தம் போட்டு திட்டினான்








ங்கொய்யால. சாவும் போது கூட எஸ்.எம்.எஸ் தான் அனுப்பிவியா?????